Wednesday, June 24, 2009

ஜோசப் மைக்கல் பெரேரா ஐ.தே.ச நீர்கொழும்பு அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினிமா.

ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமாகிய ஜோசப் மைக்கல் பெரேரா நீர்கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினிமா செய்துகொண்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பப்பட்ட அவரது ராஜினிமாக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அவர் அப்பதவியை இராஜினிமா செய்ததை அடுத்து அவ்விடத்திற்கு அவரது மகன் நியமிக்கப்படவுள்ளதாகவும், ஜோசப் மைக்கல் பெரேரா அவர்கள் ஜா-எல பிரதேச அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

அதே நேரம் தான் கட்சியில் இருந்து விலகும் நோக்குடன் பதவியில் இருந்து இராஜினிமா செய்து கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment