Monday, June 15, 2009

பிரித்தானியாவில் பாலியல் குற்றம் புரிந்த இலங்கையர் நாடுகடத்தப்படுகின்றார்.

லண்டன் கீல் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த Achala Dadallage என்ற பெயருடைய இலங்கையர் பாலியல் குற்றம் புரிந்தமைக்காக பிரித்தானிய நீதிமன்றம் அவரை நாடு கடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தின் மாடிகளுக்கான படிக்கட்டுகளிலும் ஒதுக்கு புறமான இடங்களிலும் மாணவிகளை சந்திக்கம் போது சர்வசாதாரணமாக அவர்களின் மார்பகங்களையும் பின்புறத்தையும் பிடிக்கும் இவர் மனநிலை பிறழ்ந்தவராக காணப்பட்டுள்ளார். இவருக்குப் பிரித்தானிய நீதி மன்றம் 22 மாத சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. இவரது நடத்தையையிட்டு இவரது குடும்பத்தினர் வெட்கித் தலைகுனிகின்றனர். அவரது இலங்கையில் வாழும் மனைவியும் இவரை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment