Tuesday, June 9, 2009

இலங்கைத் தமிழர்களுக்கு உதவி: இந்தியா, சீனா உறுதி

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ இலங்கை அரசுக்கு இந்தியாவும், சீனாவும் உறுதி அளித்துள்ளன. பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மருத்துவ உதவி தொடரும் என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழர்களுக்கு உதவுவதற்காக ரூ.5 கோடி தருவதாக சீனா உறுதி அளித்துள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment