Monday, June 29, 2009

அமெரிக்காவிடுத்த பயண எச்சரிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு ஏமாற்றமளிக்கின்றது. -பாலித கோகன-

அமெரிக்க பிரஜைகளுக்கு பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாகவும் இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெறகூடும் எனவும் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் தனது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன

இலங்கையில் பயங்கரவாதம் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இலங்கையின் தற்போது உள்ள பாதுகாப்பான நிலைமையை கருத்தில் கொள்ளாமல் அமெரிக்காவிடுத்த பயண எச்சரிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதில் எந்தவித ஆபத்தும் இல்லை என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment