Monday, June 15, 2009

புலிகளின் நவீன சப்மறைன் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.

வெள்ளாமுள்ளிவாய்க்கால் கரையோரப்பிரதேசத்தில் இருந்து சில மீற்றர் தூரத்தில் கடல் நீரினுள் அமுழ்த்தி வைக்கப்பட்டிருந்த சப்மறைன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பு முகாம்களில் உள்ள புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட மேற்படி சப்பறைன் 24 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்டது.

குயசயா -3 கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள மேற்படி சப்மறைன் புலிகளின் தலைவர்களின் இரகசிய கடல் பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக புலி உறுப்பினர் வழங்கியுள்ள தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment