Wednesday, June 10, 2009

தமிழ் கூட்டமைப்பு எம்பிக்களின் விடுமுறை முடிவுக்கு வருகின்றது.

இன்று பாராளுமன்றில் தமிழ் கூட்டமைப்பு எம்பிக்கள் சிலரது விடுமுறையை நீடிக்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பரிசீலித்த சபாநாயகர் விடுமுறைக்கான சரியான காரணம் சமர்பிக்கப்படவேண்டும் எனக் கூறி விடுமுறையை நிராகரித்தார்.

இன்று பாராளுமன்றில் பிரசன்னமாகியிருந்த சில த.தே.கூ எம்பிக்கள் தமது
சகாக்களின் விடுமுறை விண்ணப்பத்தை சமர்ப்பித்தபோது சபையிலிருந்த ஆழும் கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக கூக்குரல் இட்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எஸ். ஜெயானந்தமூர்த்தி, திருமதி. புத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் சார்பாகவே விடுமுறை விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. இவர்கள் வெளிநாடுகளில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment