Friday, June 12, 2009

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர்கள் தாக்கப்பட்டமை இனவெறித் தாக்குதல் அல்ல. தூதர்.

இலங்கை மாணவர்கள் சிலர் அவுஸ்திரேலியாவில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தாக்குதல் இனரீதியானதோர் விடயம் அல்ல எனவும் மாணவர்களிடையேயான தனிப்பட்ட தகராறே இதற்கு காரணம் எனவும் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயரிஸ்தானிகர் சேனக வலகம்பாய தெரிவித்துள்ளார்.

இச் செய்தியை நாம் அறிந்து இது தொடர்பாக பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது, தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்த மாநிலப்பொலிஸார் இது இனரீதியானதோர் தாக்குல் அல்ல எனவும் இந்திய மாணவர்களுடனான பிணக்கின் தொடர்சியாக இருக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்ததாக உயரிஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment