Monday, June 22, 2009

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள வெளிமாவட்ட மக்களை விடுவிக்க ஏற்பாடு. அமைச்சர் ரிசார்ட் பதுர்த்தீன்

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை தமது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரிசார்ட் பதுர்த்தீன் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்கைளைச் சேர்ந்த மக்களை மீள் குடியமர்த்த வேலைத்திட்டங்கள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அதே நேரம் வன்னியில் வசித்து வந்த வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை தமது மாவட்டங்களுக்கு அனுப்ப அரசு தீர்மானித்துள்ளது. அதன் பொருட்டு அம்மக்கள் தமது நிரந்தர முகவரியை பிரதேச செயலர் அலுவலகங்களுடாக அத்தாட்சிப்படுத்தவேண்டும். இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்.

No comments:

Post a Comment