Tuesday, June 16, 2009

தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளில் பலர் வாழ்நாளில் சிங்களவர்களைக் கண்டவர்கள் அல்லர். வட மாகான பிரதி பொலிஸ் மா அதிபர்.

புலிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் என மொத்தமாக 9728 பேர் படையினரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவித்துள்ள வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லெவ்கே, அவர்களில் பலர் இராணுவத்தினரிடம் சரணடையும் வரை தமது வாழ் நாளில் ஒரு சிங்களவரைத் தன்னும் கண்டிராதவர்கள் என தெரிவித்துள்ளதார்.

சரணடைந்துள்ளவர்கள் நான்கு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 1700 பேர் பெண்புலிகள் எனவும் அவர்களது புனருத்தாபனம் தொடர்பாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment