Sunday, June 28, 2009

ஜனாதிபதி கொலைச் சதித்திட்டத்தில் இரன்டு வெளிநாட்டுப்பிரஜைகள் கைது.

தற்கொலைகுண்டுதாரியை பயன்படுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்யதீட்டியிருந்த சதிதிட்டத்தில் இரன்டு வெளிநாட்டுபிரஜைகளை கைதுசெய்திருப்பதாக தெரிவித்த புலனாய்வு பிரிவினர் இச் சதித்திட்டத்திற்கு துணையாக இருந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு அரசியல்வாதிகளையும் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச் சதிதிட்டத்திற்கு துணையாக இருந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று வாகன சாரதிகள் உட்பட மூன்று உயர்மட்ட புலி உறுப்பினர்கள் ஏற்கனவே புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாகன சாரதிகள் அரசசார்பற்ற வெளி நாட்டு நிறுவனங்களான UNOPS, UNHCR மற்றும் Save the Children போன்றவற்றில் பணிபுரிந்தவர்கள் எனவும் இக்கொலை சதித்திட்டத்திட்டத்திற்கு 40 கிலோ எடையுள்ள C4 ரக வெடிபெருட்கள் இவ்வரசசார்பற்ற வெளி நாட்டு நிறுவனங்களின் வாகனங்கள் மூலமே கிளிநொச்சியிலிருந்து கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment