Sunday, June 28, 2009

நான் இந்த இடத்தில் இருப்பதற்கு இனியபாரதியே மூலகாரணம். -கருணா-

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களுக்கான ஒன்று கூடல் நேற்று மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் முரளிதரன், தனது இன்றைய இருப்புக்கு ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதியே பிரதான காரணம் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

கருணா நாட்டை விட்டு வெளியேறி லண்டன் சென்றிருந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை முதலமைச்சர் சந்திரகாந்தன் தனது முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்திருந்தார். அந்த காலகட்டத்தில் கருணாவின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த பலர் பிள்ளையானது தலைமையை ஏற்றுக்கொண்டிருந்த போதிலும் பாரதி தனியானதோர் அரசியல் தளம் ஒன்றை அமைத்துச் செயற்பட்டுவந்தார்.

தற்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியினால் கருணாவிற்கு வழங்கப்படுகின்ற பதவிகள் அவருக்கு அரசியல் பலம் சேர்ப்பதுடன் பலரும் கருணாவின் ஆதரவாளர்களாக தம்மை இனம்காட்ட முற்பட்டுவருகின்றனர். இந்நிலைமைகளை உணர்ந்துள்ள கருணா தனது இருப்பிற்கு காரணம் இனியபாரதியே என மிகவும் முக்கியமான நிகழ்வொன்றில் பகிரங்கமாக அறிவித்திருப்பதானது, பிள்ளையானது பலம் மேலோங்கியிருந்த காலத்தில் தன்னை கைவிட்டிருந்த எவரையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அர்த்தப்படுகின்றது.

No comments:

Post a Comment