Monday, June 8, 2009

ரிஎன்ஏ என்கின்ற அமைப்புடன் எங்களுக்கு கூட்டா? நகைப்புக்குரியது என்கின்றார் சித்தார்த்தன்.

யாழ் மற்றும் வவுனியாவில் இடம்பெற இருக்கின்ற தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆனந்தசங்கரி தலைமையிலான ஜனநாயக தேசியச் கூட்டமைப்பினருடன் இணைந்து போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இச்செய்திகள் தொடர்பாக புளொட் தலைவர் திரு- சித்தார்த்தன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்வாறான செய்தியை நான் ஊடகங்கள் ஊடாகவே அறிந்தேன். புலிகளினால் உருவாக்கப்பட்ட ரிஎன்ஏ எனும் அமைப்புடன் எங்களுக்கு என்ன கூட்டு இருக்கின்றது? புலிகளியக்கம் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இக்கூட்டமைப்பு கலைக்கப்படவேண்டும் என்றார்.

பிரபாகரன் இறந்த செய்தி கேட்ட கூட்டமைப்பினர் அவருடைய உடலை பொறுப்பெடுக்க முடியாது போயிருந்தாலும் அவருக்கான அஞ்சலியைத் தன்னும் செலுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல், கட்சி தாவுவதற்கு அலைந்து திரிவதையே செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
...............................

No comments:

Post a Comment