Monday, June 22, 2009

மங்கள தலைமையில் எங்கள் தேசிய முன்னணி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பலம் மிக்க அரசியல்வாதியாக விளங்கிய மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அவர்கள் தலைமையில் எங்கள் தேசிய முன்னணி எனும் பெயரில் புதியதொரு அரசியல் கட்சி உருவாகியுள்ளது.

தேர்தல் திணைக்கள ஆணையாளர் நாயகம் தயானந்த திசாநாயக அவர்களினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கட்சியின் தலைவராக மங்கள சமரவீரவும் செயலாளராக றுவன் பேர்டிநான்டஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்துடன் மேலும் 7 கட்சிகள் அரசியல் கட்சிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இவற்றை உறுதிப்படுத்தும் கடிதம் நேற்று 22 யூன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இலங்கையில் அரசியல் கட்சிகளாக அங்கிகாரம் பெற்றுள்ள கட்சிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment