Tuesday, June 23, 2009

ஜேர்மனியில் புலிகளின் மத்திய குழு கூடியது.

ஜேர்மன் கேளின் நகரில் ஒபா ஹவுசன் எனும் இடத்தில் உள்ள புலிகளின் காரியாலயத்தில் புலிகளின் மத்திய குழு நேற்று பிற்பகல் கூடியது. ஜேர்மன் பொறுப்பாளர் வாகீசன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் மத்தியகுழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அவசரமாக கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் ஜேர்மன் புலிகளின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தின்போது புலிகளியக்கத்தினுள் ஏற்பட்டுள்ள பிளவுகள், சதிமுயற்சிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் கே.பி குழுவின் நடவடிக்கைகளை எவ்வாறு முறியடிப்பது எனவும் பொலிஸாரின் உதவிகளை எவ்வாறு பெற்றுக்கொள்வதெனவும் விளக்கப்பட்டுள்ளது. அங்கு பேசிய ஜேர்மன் பொறுப்பாளர் வாகீசன், கே.பி குழுவினர் ஜேர்மன் நாட்டிற்கு புதிதான ஓர் தலைமையை நியமிக்க திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் இவ்விடயம் மக்களுக்கு ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை அவர்களுக்கு உரியமுறையில் விளங்கப்படுத்தி கே.பி குழுவினரை மக்கள் நிராகரிப்பதை உறிதிப்படுத்த சகல முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து அங்கத்தவர்களையும் கேட்டுக்கொண்டார் என தெரியவருகின்றது.

No comments:

Post a Comment