Friday, June 19, 2009

வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிடவேண்டும். தேர்தல் ஆணையாளர்.

ஊவா மகாண சபை, வவுனியா உள்ளுராட்சி, யாழ் நகராட்சி தேல்தலில் பங்குபற்றும் உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை வெளிடவேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் தலைவர்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்தில் வேட்பாளர்கள் தமது சொத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் தேர்தலில் வெற்றி பெறுகின்ற வேட்பாளர்கள் தமது கடமையை பாரமெடுக்கு முன்னர் அவற்றை செய்யவேண்டும். அடுத்து தேர்தலில் தோல்வியடைந்தவர்களாயின் அவர்கள் வேட்பு மனு பாரம்கொடுத்த 3 மாதங்களுள் அவற்றை செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment