Thursday, June 11, 2009

இடைத்தங்கல் முகாம் நீர்வழங்கல் குறைபாடுகளை நிவர்த்திசெய்ய ஏற்பாடு.

இடைத்தங்கல் முகாம் பகுதிகளுக்குச் சென்ற நீர் வழங்கல் அமைச்சர் மஹிந்த அமரவீர அங்குள்ள மக்களில் குடிநீர்ப் பிரச்சினைகளை அவதானித்துடன் அவற்றை தீர்க்குமகாமாக அப்பிரதேசங்களில் குழாய்க் கிணறுகளையும் நீர்த்தாங்கிகளையும் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திணைக்களத்திற்கு உத்திரவிட்டுள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கான நீர்வழங்கலுக்காக நாளொன்றுக்கு பத்துலட்சம் ரூபா பணம் செலவிடுவதாக தெரிவித்துள்ள நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திணைக்களம் 105 பவுசர்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment