Thursday, June 18, 2009

கொள்ளையர் என சந்தேகம்: வவுனியா நெளுக்குளத்தில் மூவர் சுட்டுக்கொலை.

கொள்ளையர்களென சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று வவுனியாவில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் நேற்று அதிகாலை வவுனியா நெளுக்குளம் மயானத்திற்கு அருகில் நடந்துள்ளது.
நெளுக்குளம் கூமாங்குளம் வீதியில் மயான பிரதேசத்தில் பொலிஸார் இரவு காவல் கடமையில் இருந்தபோது, அதிகாலை இரண்டு மணியளவில் துவிச்சக்கரவண்டியில் மூவர் செல்வதினை அவதானித்துள்ளனர். அவர்களை நிற்குமாறு உத்தரவிட்டபோது தப்பியோட முனைந்த வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக த்தில் மூவரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார்கள்.

இவர்களிடமிருந்து ரி-85 தன்னியக்க துப்பாக்கி ஒன்று, கைத்துப்பாக்கி ஒன்று, கிரனைட்டு ஒன்று கையடக்க தொலைபேசிகள் மூன்று தேசிய அடையாள அட்டைகள் ஆகியனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

மாவட்ட நீதிவான் ஏ.ஜி. அலெக்ஸ்ராசா நேற்று வியாழன் காலை சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து விசாரணைகளை நடத்தினார்.

சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலை சவச்சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நன்றி: தினகரன்.

No comments:

Post a Comment