Monday, June 1, 2009

குத்துவிளக்குச் சின்னத்தில் போட்டியிடுவோம் - சித்தார்த்தன்

இடம்பெற இருக்கின்ற யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத்தேர்தல்களில் தமது ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் சின்னமாகிய குத்துவிளக்குச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அம்முன்னணியின் உறுப்பு இயக்கங்களின் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் திரு. சித்தார்த்தன் இலங்கைநெற் இற்குத் தெரிவித்தார். அத்துடன் தமது முன்னணியுடன் ஏனைய தமிழ்க் கட்சிகளையும் இணைத்துக்கொள்ள தாம் முயற்சித்து வருவதாகவும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அதேநேரம் சகல தமிழ் அமைப்புக்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சேர்ந்து போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வழைப்பை புளொட் அமைப்பினர் நிராகரித்துள்ளதாகவும் நேற்றைய வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment