Thursday, June 11, 2009

ஜனாதிபதியை கொலைசெய்ய முயன்ற இராணுவ அதிகாரியின் தடுப்புக்காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை கொலைசெய்ய புலிகளின் தலைவர் ஒருவருடன் இணைந்து செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரி லெப் கேணல் றஞ்சித் சந்திரசிறி பெரேரா வை எதிர்வரும் யூலை 30ம் திகதி வரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்ய கல்கிஸை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ரத்மலாணை இராணுவத்தளத்தின் கட்டளை அதிகாரியான இவர் ஜனாதிபதியை கொல்லும் பொருட்டு இரு தடவைகள் தற்கொலைதாரிகளை ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் ஓர் மேஜர் ஜெனரல் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment