ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் தேசிய வெற்றியை கொண்டாடும் வகையில் வைபவம் ஒன்று கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இவ்வைபவத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
முப்படையையும் சேர்ந்த 4500 வீரர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில்
முப்படையின் அணிவகுப்பும், இராணுவ கவசவாகன படையணியின் அணிவகுப்பும் இடம்பெற்றது. அத்துடன் நவீன ரக ஆயுதங்கள், யுத்த கப்பல்கள், யுத்த விமானங்கள் அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்டதுடன், பல்வேறு கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பல அமைச்சர்கள், பொதுமக்கள் உட்பட பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்வில், வன்னி படை நடவடிக்கையில் ஈடுபட்ட படைவீரர்களை பாராட்டி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறப்புரை ஆற்றினார்.
No comments:
Post a Comment