Wednesday, June 24, 2009

காணாமல்போன மாணவி நேற்று சடலமாக மீட்பு

எஹலியகொடையில் காணாமற்போன பாடசாலை மாணவி நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
எல்லாவெல பிட்டகந்த பகுதியைச் சேர்ந்த பியுமி மதூசிக்க எனும் (15) மாணவியே இனந்தெரியாதோரினால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் தலையில் தாக்கப்பட்டு கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

எஹெலியகொடை எல்லாவெல பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் இம்மாணவி நேற்று முன்தினம் பாடசாலையில் நடைபெற்ற மாணவத் தலைவர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்ட மாணவி வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பாக தேடுதல் நடத்திய பொலிஸார் நேற்றுக்காலை மாணவியை சடலமாக மீட்டுள்ளனர். வீதியிலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியினுள்ளேயே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சம்பவத்துக்கு காரணமானவர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி தினகரன்


No comments:

Post a Comment