Monday, June 22, 2009

நாடுகடந்த தமிழீழம் தொடர்பாக ஊடகங்கள் ஊடாகவே அறிந்தோம் : த.தே.கூ

புலிகளின் சர்வதேச தலைமை எனக்கூறப்படும் பிரிவொன்றினால் அறிவிக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழம் எனும் விடயத்தை நாம் ஊடகங்களுடாகவே அறிந்தோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இந்திய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக த.தே.கூட்டமைப்பினராகிய எம்மிடமோ நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்களிடமோ எவ்வித கருத்தையும் சம்பந்தப்பட்டவர்கள் கேட்டிருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதே நேரம் கே.பி ன் இந்த அறிவிப்பபை இட்டு புலம்பெயர்ந்துள்ள புலிகளின் பிரமுகர்கள் பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

No comments:

Post a Comment