Sunday, June 7, 2009

கப்டன் அலி விடுதலைசெய்யப்படலாம்.

கப்டன்அலி கப்பலினுள் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது, எவ்விதமான இராணுவ தடபாளங்களோ அன்றில் ஆபத்தை விளைவிக்ககூடிய பொருட்களோ இருக்கவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ள நிலையில் அக்கப்பலில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்காக கொண்டுவரப்பட்ட நிவாரணப்பொருட்கள் அம்மக்களைச் சென்றடையும் முகமாக அக்கப்பல் விடுதலை செய்யப்படும் என பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதே நேரம் அனுமதியில்லாமல் இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த குற்றத்திற்காக கப்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment