Tuesday, June 23, 2009

நோர்வே புலிகளின் ரிப் ரொப் புலனாய்வுத்துறை. -கபில்-

நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோ வில் குறோன்டாலன் என்ற இடத்தில் ஓர் நிலக் கீழ் தொடருந்து செல்லுமிடம் உண்டு. இவ்விடத்தில் உள்ள கட்டிடத்தில் பல தமிழர்களின் கடைகள் உண்டு. அக்கட்டிடத்தில் ரிப்ரொப் எனும் பெயருடைய பெட்டிக்கடையொன்றும் உள்ளது. இங்கு பெரும்பால தமிழர்கள் கூடுவர்.

ரிப்ரொப் எனும் கடையின் உரிமையாளரான றொபின் என்பவர் தமிழ் மக்கள் மத்தியில் தன்னை புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவராக அறிமுகப்படுத்தி வருவதாக தெரியவருகின்றது. அத்துடன் புலிகள் தனது பெயரில் புலனாய்வுத் துறை கிளையொன்றை வைத்திருந்தாகவும் அதற்கு தான் பல வருடங்கள் தலைமை வகித்ததாகவும் கூறியவருவதாக மக்கள் கூறுகின்றனர்.

ஜேம்ஸ்போன்ட007 வேடம் போடும் இந்நபர்கள் கடந்தகாலங்களில் பல முறை பெண்களுடன் சேட்டை உட்பட பல குற்றங்களுக்காக உள்ளே சென்று வந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது. எனவே மக்கள் இவ்விடத்திற்கு செல்லும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நோர்வேவாழ் ஆர்வலர்கள் அங்குள்ள மக்களுக்கு பிரத்தியேகமாக அறிவுறுத்தி வருவதாக எமது நோர்வே செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

புலிகள் இன்று இரண்டுக்கு மேற்பட்ட பிரிவுகளாக பிரிந்துள்ள நிலையில் பணத்திற்காக புல(நாய்)வு வேடம் போடும் இவர்களது நடமாட்டம் உள்ள இடங்களில் மக்கள் அவதானமாக இருப்பது சிறந்ததாகும். காரணம் இன்று புலிகளியக்கத்தினுள் தோன்றியிருக்கும் பிளவுகள் எதிர்காலத்தில் மக்கள் மீது வன்செயல்களைப் பிரயோகிக்கக் கூடிய நிலை ஒன்று தோன்றலாம் என அச்சப்படும் இச்சந்தர்ப்பத்தில், இவர்கள் மக்கள் கதைக்கின்ற விடயங்களைக் ஒட்டுக்கேட்டு புலிகளின் ஏதாவது ஒரு தரப்பிற்கு போட்டுக்கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment