Sunday, June 21, 2009

குடு மல்லி வெட்டிக் கொலை

பிரபல பாதாள குழுவொன்றின் தலைவரான குடு மல்லி என்பவர் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதோரினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்ல தலங்கம பகுதியில் வைத்து சனிக்கிழமை இரவு 11.40 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். ‘குடுமல்லி’ யென பலராலும் அறியப்பட்டிருந்த டி. ஏ. தம்மிக்க ஸ்ரீநாத் செல்வா என்பவரே இனந்தெரியாதோரினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுள்ளார்.

பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment