Monday, June 8, 2009

பாராளுமன்ற உறுப்பினர்களாக இருவர் இன்று பதவிப் பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினர்களாக இருவர் இன்று (09) சபாநாயகர் டபிள்யு. ஜே. எம். லொக்குபண்டார முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்கின்றனர். மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக நந்திமித்ர ஏக்கநாயக்கவும், காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சந்திம வீரக்கொடியும் பதவி ஏற்க உள்ளதாக பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் டபிள்யு. பி. டி. தசநாயக்க கூறினார்.

மாத்தளை மாவட்ட ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் அலிக் அலுவிஹார மரணமடைந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஐ. தே. க. பட்டியலில் அடுத்து தெரிவாகியிருந்த நந்திமித்ர ஏக்கநாயக்க நியமிக்கப் பட்டுள்ளார். இவர் மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. கூட்டமைப்பு உறுப்பினராக தெரிவு செய்யப் பட்டார். நீதி, சட்ட மறுசீர மைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொடவின் வெற்றிடத்துக்கு காலி மாவட்ட ஐ. ம. சு. மு. பட்டியலில் அடுத்து தெரிவான அரச ஈட்டு முதலீட்டு வங்கித் தலைவர் சட்டத்தரணி சந்திம வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றம் இன்று (09) கூடியதும் முதல் நிகழ்வாக இரு எம்.பிக்களும் பதவி ஏற்கும் வைபவம் இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் கூறினார்.

யாழ். மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் இறந்ததால் ஏற்பட்ட வெற்றிட த்துக்கு எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. புதிய உறுப்பினரின் பெயரை தமிழரசுக் கட்சி இதுவரை அறிவிக்கவில்லை என தசநாயக்க குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment