ஊடகவியலாளரான போத்தல ஜெயந்த தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து கைது செய்யப்பட்ட இரு ஊடகவியலாளர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். லங்காஈநியூஸ் இணையத்தளத்தின் சிங்கள சேவை பிரதம ஆசிரியரான பேனாட் ரூபசிங்க அவர்கள் போத்தல ஜெயந்த கடத்துப்பட்ட சில நிமிடங்களில் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்த பொலிஸார் பேனாட் ரூபசிங்க அவர்களின் முறைப்பாடு தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அவரை கைதுசெய்து ஒருநாள் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்திருந்ததுடன் நேற்று பிற்பகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிமன்றம் அவருக்கும் அவரது இயக்குனருக்கும் பிணை வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment