Wednesday, June 10, 2009

விசேட அதிரடிப் படையினரிடம் 6 புலிகள் சரணடைந்துள்ளனர்.

வவுனியா மேற்கே உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் நேற்று காலை 9.00 மணியளவில் 6 புலிகள் சரணடைந்துள்ளனர். அவர்களில் 3 ஆண்களும் 3 பெண்களும்
அடங்குகின்றனர்.

இராசரத்தினம் நிர்மலரூபன் வயது 30
சுப்ரமணியம் சத்தியசீலன் வயது 24
வசந்தராஜா வயது 21
ராஜேந்திரன் மணோசீலா வயது 24
கணேசலிங்கம் கார்த்திகா வயது 20
சிதம்பரநாதன் மேகலா வயது 20

சரணடைந்த புலிகள் தமது ஆயுதங்களை மறைவிடம் ஒன்றில் வைத்துவிட்டு படை முகாமிற்கு நேரடியாக சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் வளங்கிய தகவல்களின் அடிப்படையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment