Thursday, June 4, 2009

இடைத்தங்கல் முகாம்களில் பெற்றோரை இழந்த 350 குழந்தைகள்-

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் பெற்றோரை இழந்த 10 வயதிற்கு குறைவான பிள்ளைகள் 350 பேர் இடைத்தங்கல் முகாம்களில் உள்ளனர் என அனர்த்த நிவாரண மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் றிசார்ட் பதுர்த்தீன் தெரிவித்துள்ளார்.

இக்குழந்தைகளது போசாக்கு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் பிரதேச செயலக அதிகாரிகளினால் கவனிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் அவர்களின் நிலைமைகளை நிவாரண சேவை அதிகாரிகள் விசேடமாக அவதானித்துவருவதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் இடைத்தங்கல் முகாம்களில் 250 பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளதாகவும் அவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் கூறியள்ளார்.


No comments:

Post a Comment