Tuesday, June 9, 2009

19 ம் பரசூட் படையணியினர் பயிற்சியை முடித்து வெளியேறினர்.

விமானப்படையின் 19ம் பரசூட் படையணியனரின் வெளியேற்றம் வெகு விமர்சையாக இன்று கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் எயார் வைஸ் மார்ஸல் பிரேமச்சந்திர பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அத்துடன் இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை உயரதிகாரிகளுடன் , படையினரின் பெற்றோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அங்கு இடம்பெற்ற அணிவகுப்புக்களின் போது எம்ஐ 17 ரக ஹெலிக்கொப்டர்களில் 1000 அடி உயரத்தில் இருந்து பரசூட் மூலம் பாயும் நிகழ்வுகள், வானோடிகள் 6000 ஆடி உயரத்தில் இருந்து பாய்கின்ற அபாயகரமான நிகழ்வுகளைக் காட்டினர். அதன் போது சார்ஜென்ட் சமரசிங்க தேசியக் கொடியுடனும் பரசூட் பயிற்சிக் கல்லூரியின் கட்டளைத் தளபதி பாகொட விமானப்படை கொடியுடனும் தரையிறங்கினர்.

19ம் பரசூட் அணியில் ஒரு அதிகாரி உட்பட 32 பேர் வெளியேறியுள்ளனர்.

No comments:

Post a Comment