Wednesday, June 24, 2009

100 கிலோ தங்க நகைகளும் 6.5 மில்லியன் ரூபாக்களும் மீட்பு.

தடுப்புக்காவலில் உள்ள புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் 100 கிலோ தங்க நகையும் 6491000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இறுதி யுத்தம் இடம்பெற்றபோது புலிகளின் உயர் மட்டத்தளபதிகள் வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் தங்கியிருந்த மறைவிடம் ஒன்றிலேயே இவை மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் தேடுதல் மேற்கொண்டுவரும் படையினர் புலிகளினால் மறைத்துவைக்கப்பட்டுள்ள பல ஆயுதக்கிடங்குகளை மீட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment