Monday, May 11, 2009

Sri Lankaguardian பிரதம ஆசிரியரியரை சிஐடி யினர் விசாரணைக்குட்படுத்தினர்.


சிறிலங்கா கார்டியன் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் நிலந்த இலங்கமுவ அவர்களை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். கடந்த 8ம் திகதி குற்றப் புலனாய்வுத் துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட அவர் 5 மணிநேரம் விசாரணை செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

விசாரணைகளின்போது அவரது இணையத்தில் சில எழுத்தாளர்களால் புலிப்பயங்கரவாதத்தை ஆதரித்து எழுதப்பட்டிருந்த சில கட்டுரைகள் தொடர்பான விளக்கம், அவ் ஆக்கங்கள் எவ்வாறு கிடைக்கப்பெற்றது போன்ற விடயங்கள் சிஐடி யினரால் கோரப்பட்டதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment