Sunday, May 24, 2009

சாகாவரம்பெற்ற மிஸ்டர் பிரபாகரன் – யஹியா வாஸித்-

எல்லாமே நேற்றுப் போலவும் இருக்கின்றது. எல்லாமே கனவு போலவும் இருக்கின்றது. முற்றும் துறந்து முற்றும் கற்ற ஒரு சமூகம் முற்றாகவே மொத்தத்தையும் தொலைத்துவிட்டு வானத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

தலைவர் உயிருடன் இருக்கின்றார் என ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். தலைவர் பாதுகாப்பாக புலம்(ன்) பெயர் அபிமானிகளின் அபிப்பிராயப்படி உண்மையாகவே உயிருடன் இருக்கின்றார். ஓகே.ரொம்ப சந்தோஷம். முப்பது வருடம் முண்டுகட்டிய தமிழர்களை முண்டித் தள்ளி, கிட்டத்தட்ட ஒரு இருபது வருடம் தனிக்காட்டு ராஜாவாக வாழ்ந்து, முள்ளியவளைக்காட்டுக்குள் முடங்கி, மூக்குடைபட்டு மொத்த தமிழனையும் உலகெல்லாம் பிச்சைபாத்திரம் ஏந்த வைத்ததலைவர் உயிருடன் இருக்கின்றார். ரொம்ப சந்தோஷம்.

தலைவர் கே.பி.யுடனும் முக்கிய வசூல் மன்னர்களுடனும், வெளிநாட்டுவாழ் ரி.வீ, றேடியோ, இன்டர்நெட் காறர்களுடனும் தொடர்பில் இருக்கின்றார். மகா மகா சந்தோஷம்.
எல்லா இயக்கங்களையும், எதிர் கருத்துக் காறர்களையும் கொன்று கைலாசம் அனுப்பிய அவர் எமனுக்கு பச்சடி கொடுத்துவிட்டு சாகாவரத்துடன் இருக்கிறார். கிறேட் எஸ்கேப். பாராட்டுகின்றோம்.

படுதோல்வி அடைந்த வை.கோ, சந்தனமரக்கடத்தல் மன்னன் வீரப்பனைக் காட்டிக்கொடுத்த நக்கீரன், இனி வெளிநாட்டு வாழ் சிறிலங்காதமிழனுக்கு திருட்டு வி.சி.டி.விற்றால்தான் பிழைக்கலாம் என்ற நிலையில் உள்ள பாரதிராஜா போன்றவர்களுடன் தலைவர் தொடர்பில் உள்ளார். பண்டாஸ்ரிக்.

58வது படையணி, 57வது படையணி, 52வது படையணி, விமானப்படை, தரப்படை, கடற்படை,ராடார்கள், ஏவுகணைகள், சற்லைட் எல்லா கசமாலங்களுக்கும் தண்ணி காட்டிவிட்டு தலைவர் பக்கா சேப்டியாக இருக்கின்றார். ஓள்றைட்.

ஒரு நாட்டின் தலைவன், அந்த நாட்டின் பாதுகாப்புத்துறைகள், அதன் உளவுப்படை என மொத்த சனமும் வோர் இஸ் ஓவர் என சொல்லுகின்றது. நோ எங்கள் தலைவர் இருக்கின்றார். அவர்வருவார், வர வேண்டிய நேரத்தில் வரவேண்டிய இடத்திற்கு வருவார் என புலிகளின் மொத்த பரப்புரைகளும் கூறுகின்றன.வெரிகுட்.

ஜோன்.எப்.கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார், மாட்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டார்,
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார், சதாம் உசேன் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சபாண்டவர்கள், கௌரவர்கள், இராம இலக்குவன், வள்ளுவன், வள்ளலார், திருமூலர், திருநாவுக்கரசர் என எல்லா மனிதப்பதர்களும் செத்துத்தான் போனார்கள். ஆனால் எங்கள் தலைவர் கூடுவிட்டு கூடுபாய்ந்துள்ளார். ஹீ இஸ் டிரக்ட் புறம் கைலாயநாதர். இவர் அவருடைய செல்ல பிள்ளை.

எமக்கு முருகனையும் பிள்ளையாரையும்தான் தெரியும். இவர் கைலாயநாதர்ர சின்னவீட்டுக்கு பிறந்தவர். அதனால் ஹீ கொட் ஓள்த பவர் புறம் பரப்பிரம்மா. ரொம்ப நல்லது.

தலைவர் வரவேண்டிய நேரத்துக்கு வரவேண்டிய இடத்துக்கு வந்து தமிழீழ போராட்டத்தை தொடங்கி வைப்பார். இளைஞர் பேரவையோ, புதிய புலிகளோ தொடங்குவது கொஞ்சம் கஸ்டம்.

அவர்களெல்லாம் உண்மையிலேயே இறந்துவிட்டார்கள். எனவே புதிய அணி ஒன்றை சாகாவரம் பெற்ற தலைவர் அமைக்க வேண்டும்.

முன்னரைப்போல் வல்வெட்டித்துறையிலிருந்தோ, பருத்தித்துறை நெல்லியடியிலிருந்தோ, கள்ளியங்காட்டிலிருந்தோ இயக்கம் அமைக்க முடியாது. மிஸ்டர் டக்ளஸ் குறுப்புட கெடுபிடி கொஞ்சம் இருக்கும் போல் இருக்கிறது. எனவே புலம்பெயர்நாட்டில் பொருத்தமான இடமான நோர்வேயில் இயக்கம் ஆரம்பிக்கலாம். திருவாளர் சொல்ஹேய்ம் அவர்களை உள்ளியக்கத் தொடர்பாளராக போட்டு இயக்கம் கட்டலாம். அந்த மனிதரும் இப்போது வியாபாரம் ஒன்றும் இல்லாமல் இருக்கின்றார். மகிந்த அவர்களும் இவரை அடிக்கடி வம்பிக்கிழுத்துக் கொண்டிருக்கின்றார். எனவே மகிந்தவுக்கு எதிராக காய்களை நகர்த்த சொல்ஹேய்ம் பொருத்தமானவர்.

இராணுவ பிரிவுக்கு சாகாவரம் பெற்ற முருகதாஸைப் போடலாம். ஜெனிவா அய்யன்னா நாவன்னாவுக்கு முன் தீக்குளித்து இறந்ததாகச் சொல்லப்பட்ட முருகதாஸ் என்ற இந்த தம்பி மாத்தையா மாதிரி காட்டிக்கொடுக்கவோ, கிட்டண்ணா மாதிரி அவசரப்படவோ மாட்டாது
தலைவரின்ட ஓடரை மட்டும் கெரிஅவுட் பண்ணக்கூடிய பிள்ளை. தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்ததாக சொல்லப்பட்ட முத்துக்குமார் அவர்கள் உதவி இராணுவ தளபதிக்கு பொருத்தமானவர். இவரை உதவி இராணுவ தளபதியாகப் போடுவதால் இன்னொரு நன்மையும் இருக்கின்றது. அகண்ட தமிழீழத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவையும் இணைத்துக்கொள்ள இலகுவாக இருக்கும்.

ஐங்கரன் இன்டர்நெஷனல் ஊடாக உலகில் உள்ள மொத்த தமிழ் சனத்தின்ர விபரத்தையும் ஒரு நொடியில் திரட்டிவிடலாம். எங்கெங்கு அவர்களது டி.வி.டீ.விற்கின்றதோ அங்கெல்லாம் தமிழன் தலைநிமிர்ந்து வாழ்கின்றான். எனவே அதை வைத்தே அகண்ட தமிழீழத்தின் மேப்பை வரைந்து கொள்ளலாம்.

அமெரிக்கா கண்டம், ஐரோப்பா கண்டம், அவுஸ்திரேலியா கண்டம், சவூதி அரேபியா, டுபாய், லெபனான், துருக்கி தவிர ஆபிரிக்கா கண்டம், சைனா, தென்கொரியா, வட கொரியா, இந்தோனேசியா, ஜாவா, சுமத்ரா, ஜப்பான் தவிர ஆசியா கண்டத்தை இணைத்ததாக தமிழீழத்தை அமைத்துக் கொள்ளலாம். ஆசியாவில் சிறிலங்கா என்ற ஒரு குட்டித்தீவு இருக்கிறது. அதை இப்போதைக்கு தவிர்த்து விடலாம். அங்கு கொஞ்சம் முறட்டு சிங்களவர்கள் இருப்பதாக சொல்கின்றார்கள். நிறைய பொய் சொல்கின்றார்கள். மாவிலாறில் சூல் கொண்டு, கிளிநொச்சியில் கருவாகி, முள்ளிவாய்க்காலில் குடிகொண்டுள்ளோம் என என்னன்னவோ பிதற்றுகின்றார்கள். அற் த மூமன்ட் வீ டோன்ற் வோன்ட் டச் வித் தெம்.

நாம் யார், நமது பரம்பரை என்ன, வல்வெட்டித்துறையான்ட பவர் என்ன என்பதை முதலில் உலகுக்கு காட்டவேண்டும். மகின்தவை மிரட்டுகின்றேன் பாருங்கள் எனக்கூறிவிட்டு, சிறிலங்கா போய், நாங்க அழுவுற மாதிரி அழுவுறோம், நீ அடிக்கிற மாதிரி அடி மச்சான் என சொல்லி விட்டு வந்த இந்த பறங்கித் தலையர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும்.

சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த இளையோரை இதற்கு பயன்படுத்தலாம். துரையப்பாவை போட்ட மாதிரி தலைவரே இந்த ஒப்பரேஷனுக்கு வர வேண்டிதில்லை. இனி தம்பிகளை வைத்தே செய்யலாம். தல அப்படியே தலமறைவாகவே இருக்கட்டும். அவர் வர வேண்டிய நேரத்துக்கு வர வேண்டிய இடத்துக்கு வந்தால் போதும்.

நமது அத்தனை கோரிக்கைகளையும் நிராகரித்த சைனாவின் பொருட்களை அத்தனை நாடுகளும் பகிஷ்கரிப்பதுடன், உடனடியாக எமக்கு வீட்டோ பவரை வழங்குமாறு உலக நாடுகளை வற்புறுத்த வேண்டும். நோ உண்ணாவிரதம், அடிதான் இதற்கு மருந்து. உலக நாடுகளுக்கு மரண பயம் வாறமாதிரி அடிக்க வேண்டும். உலகம் முழுக்க ஒரு பத்தோ அல்லது ஐம்பது பேர்களுடைய தலைகளை வெட்டி அறுத்து தலைவேற முண்டம் வேற போட வேண்டும். இதற்கு தலைவரே பீல்டுக்கு வர வேண்டிய அவசியமில்லை. தல சேப்டியாக இருக்கட்டும். அது வரவேண்டிய நேரத்துக்கு வந்தால் போதும்.

அம்பாரையில் ஹாமுதுறுக்களையும், ஏறாவூரில் முஸ்லீம்களையும், யாழ்ப்பாணத்திலும் கல்முனை நற்பிட்டி முனையிலும் ரெலோ போராளிகளையும் அறுத்து எரித்த அனுபவசாலிகளை இந்த ஒப்பரேஷனுக்கு உபயோகிக்கலாம். ஐ திங் ஷோ திஸ் இஸ் அ றைற் சொய்ஸ் போர் ஆள் அறுக்கும் ஒப்பரேஷன்.

தேனி, அதிரடி, இலங்கைநெற், சூத்திரம், நெருப்பு, எங்கள் தேசம் போன்ற இணையத்தளக்காறர்களிடம் ஒரு நீண்ட நெடிய பார்வையை செலுத்த வேண்டும். மகின்த சகோதரயாவையும் மிஞ்சி ஒரு பெரிய போராட்டத்தை இவர்கள்தான் நடாத்தியிருக்கின்றார்கள். மைகோட். எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறார்கள். இது நமக்கு சரிப்பட்டு வராது. ராஜினி திரணகம, நீலன் திருச்செல்வம் ஸ்டைல்தான் இவர்களுக்கு சரிப்பட்டு வரும். கோ அஹேட். லேட்டனாலும் லேட்டஸ் ஆக முடிக்க வேண்டிதுதான்.

பிரான்ஸ் லாச்சப்பிள் பகுதியில் கொஞ்சம் பாக்கி (பாக்கிஸ்தானி), ஜேர்மனி பேர்லின் பகுதியில் கொஞ்சம் அல்ஜீரியன், இங்கிலாந்து ஈஸ்ட்ஹாம் பகுதியில் கொஞ்சம் காஸ்மீர் முஸ்லீம்கள் என நமது பகுதியில் கொஞ்சம் காக்காமார் நம்மை காட்டிக் கொடுத்துக் கொண்டு திரிகின்றார்கள். திஸ் இஸ் நொட் குட் போர் அகண்டு விரிந்து நீண்ட தமிழீழம். ஓடரை போட்டு காக்காமாரை நம்ம ஏரியாவைவிட்டு துரத்த வேண்டியுள்ளது. போன முறை யாழ்ப்பாண காக்காமார் கொஞ்சம் நகைகளை எடுத்துச்சென்றுள்ளதாக கேள்வி. இம்முறை அந்த தவறை செய்துவிடாதீர்கள். கிளீன் வோஸ் அவுட்.

கனடா ரொரன்டோவில் பாரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். பழைய ஈபிஆர்எல்எப் காய்களும், புளட், ரெலோ பார்ட்டிகளும் ரொம்பத்தான் துள்ளுகின்றார்கள். ரஞ்சன் விஜேரத்னா, ரணசிங்க பிரேமதாஸ, புளட் மாணிக்க தாஸன் ஸ்டைல் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

பான்கிமூன், ஒபாமா, ஹிலாரி கிளிங்டன் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவர்கள் மூவரும் எந்தப் பக்கம் நிற்கின்றார்கள் என்பதே தெரியாமல் இருக்கின்றது. பொட்டண்ணாவும் சரியான பிக்சறை தருவதாக இல்லை. பாலாண்ணாவையும் 18ம் திகதியில் இருந்து தேடித்தேடி அலுத்து விட்டது. ஜீரிவியில் கடந்த ஆறுமாதங்களாக ஆய்வுகள் செய்த அந்த வயசுபோன அப்புவை இந்தப் பணிக்கு நியமித்து ஒரு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

சகலவற்றையும் கிளியர் பண்ணிவிட்டு வசூலை தொடங்க வேண்டியதுதான். மரணத்தை வென்ற மகாத்மா. சிங்களத்துக்கு சிம்மசொப்பனமான சின்னக் கவுண்டர், யுரோப்பாவை கலக்கிய இரும்பு மனிதன், எமனுக்கே டாட்டா காட்டிய எமகாதகன். கார்த்திகை 26ல் அடுத்த பிளான் பற்றி பேசுவார்.

அகன்ற நமது இந்த பூமிப்பந்திலே வடக்கே நேபாள், தெற்கே அண்டார்டிகா, கிழக்கே அவுஸ்திரேலியா, மேற்கே துருக்கியை எல்லையாக கொண்ட எமது நாட்டை வந்தான் வரத்தானுக்கெல்லாம் தாரை வார்த்துவிட்டு காட்டிக் கொடுத்த எட்டப்பர்களை அடியோடு அழிக்கும் எமது போராட்டம் இன்று முற்றுப் பெறும் நிலையில் உள்ளது.

உண்ணாவிரதம், ஹர்த்தால், கறுப்புப்பட்டி, கடையடைப்பு, சங்கிலிப் போராட்டம் என்று தொடர்ந்த எமது போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க முற்பட்ட வந்தான் வரத்தானுக்கெல்லாம் நமது மாவீரர்கள் தக்க பாடம் படிப்பித்துள்ளார்கள். இங்கிலாந்து பாராளுமன்றம், நோர்வே அரசு, ரொரன்டோ வீதிகள், அய்யன்னா நாவன்னா முற்றுகை என ஒரு பார் புகழும் போராட்டத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

இன்றைய இந்த போராட்டத்தின் வெற்றி மூளைக்கும் முன்னாணுக்கும் சிந்திக்கும் திறனே இல்லாத இளைஞர்களால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இதே போல் எங்கள் இளைஞர்கள் தொடர்ந்து போராடுவார்களானால் அடுத்த இருபத்தி ஐந்து வருடத்துக்கு கே.பி.அண்ணா, வசூல் மன்னர்கள், றேடியோ, ரிவீ, இன்டர் நெட் வியாபாரிகள் அரசியல் வியாபாரம் செய்ய ரொம்ப இலகுவாக இருக்கும். இதே நிலையிலேயே நீங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும். சிந்திக்கின்ற திறன் உங்களுக்கு கூடவே கூடாது. அப்படி எவராவது சிந்தித்தீர்களானால் மொத்த ஹோள்சேல் வியாபாரமும் படுத்துவிடும்.

ஜஸ்ட் இன்னுமொரு முப்பது வருடம் மயக்கத்திலேயே இளையோராகிய நீங்கள் இருக்க வேண்டும். வாழவேண்டும். வாழ்க தமிழீழம்.


24-05-2009


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com