Wednesday, May 6, 2009

ஓலுவில் பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை



சில நிமிட நேரங்களுக்கு முன்னர் ஒலுவில் அல்லிமுல்லைச் சந்தியில் இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் இன்று காலை 7.30 மணியளவில் வவுனதீவுப் பிரதேசத்தில் இனம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பாவற்கொடிச்சேனை வினாயகவித்தியாலய ஆசிரியரான ரவீந்திரதாஸ் என்பவர் உயிரிழந்துள்ளார். இக்கொலை தொடர்பாக அங்கு இயங்கும் தமிழ் ஆயுதக்குழு ஒன்றின் உறுப்பினர் ஒருவர் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


No comments:

Post a Comment