Monday, May 4, 2009

நாவிதன்வெளி பிரதேசசபை அலுவலகத்தில் ஆயுததாரிகள் அட்டகாசம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுததாரிகள் நாவிதன்வெளி பிரதேச சபை அலுவலகத்தினுள் புகுந்து சபையின் தலைவர் கலையரசன் உட்பட அங்குள்ள அதிகாரிகள் ஊழியர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இன்று பிற்பகல் 3 மணியளவில் ரிஎம்விபி யை சேர்ந்த சிறி மற்றும் ஆனந்தன் தலைமையில் சென்ற ஆயுத தாரிகள் குறிப்பிட்ட சபையின் நடவடிக்கள் யாவும் தமது அமைப்புக்கு தெரியப்படுத்தப்படவேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அச்சபையில் அங்கம் வகிக்கும் அனைவரும் சுட்டுக்கொல்லபடுவர் எனவும் மிரட்டியுள்ளனர்.

அத்துடன் அச்சபையின் ஒப்பந்தவேலைகள் யாவும் தாம் சிபார்சு செய்கின்ற ஒப்பந்தக்காரர்களுக்கே வழக்கப்படவேண்டும் எனவும் கூறியதாக அங்குள்ள ஊழியர் ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார். சபையின் தலைவர் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்ய உத்தேசித்துள்ளாகவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment