Saturday, May 2, 2009

இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள் பாராளுமன்றினூடாக தீர்க்கப்படவேண்டும். சர்வதேசத்தினால் அல்ல. -ரணில்-



புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் 1993 மேதினம் அன்று கொல்லப்பட்ட நாட்டின் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 16வது ஆண்டு நினைவு தினத்தில் கலந்து கொண்டு பேசிய ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் உள்நாட்டுப்பிணக்குகள் எமது பாராளுமன்றத்தின் ஊடாக தீர்க்கப்படவேண்டிய ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இலங்கை அரசிற்கு சர்வதேச ரீதியில் உள்ள அழுத்தங்கள் தொடர்பாக இன்றைய அரசு பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்தாதது துரதிஸ்டவசமானதாகும். இவ்விடயத்தில் நாம் மறைந்த தலைவர் பிரமதாஸ அவர்களைப் பின்பற்றவேண்டும். அவர் எந்த காலகட்டத்திலும் நாடு சிக்கல்களை எதிர்நோக்குகின்றபோது அதற்கான தீர்வினை பாரளுமன்றத்தில் தெரிவித்து அனைவரதும் அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்வார் என்று கூறினார்.

No comments:

Post a Comment