ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களது இலங்கை விஜயம் நிச்சயிக்கப்படவில்லை என ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மிகேல் மொன்ராஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா செயலாளர் நாயகம் அவர்களை இலங்கை வந்து விடயங்களை நேரடியாக பார்வையிடுமாறு
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர் இதைத் தெரிவித்துள்ளார். அங்குள்ள உயிர்களைப் பாதுகாப்பதற்கு அவரது விஜயம் உதவும் என அவர் அவர் நம்பும் பட்சத்தில் அது பற்றி பரிசீலிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment