Monday, May 4, 2009

போர் நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்: ஸ்ரீரவிசங்கரிடம் விடுதலைப்புலிகள் வேண்டுகோள்

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் சமீபத்தில் இலங்கை சென்று ஈழத் தமிழர்களை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அவருடன் விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் தலைவர் பி.நடேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர் பேசுகையில், "இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உணவும், மருந்தும் இன்றி தவிக்கிறார்கள். எனவே இலங்கையில் மீண்டும் போர் நிறுத்தம் செய்ய தேவையான ஏற்பாடுகளை நீங்கள் செய்யுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார். இந்த தகவலை வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment