Saturday, May 16, 2009

புலிகளின் இறுதிப் பயணம். பெரும் எண்ணிக்கையான புலி உறுப்பினர்கள் ஆயுதங்களை களப்பில் எறிந்து படையினரிடம் சரண்.

இன்று காலை அரச கட்டுப்பாட்டினுள் வந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களுள் பெரும் எண்ணிக்கையான புலிகள் படையினரின் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளனர். அவ்வாறு வந்துள்ள புலிகளில் 50க்கும் மேற்பட்டோர் சிறார்ப் புலிகளாகும் என களமுனையில் உள்ள ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்களில் பலர் தமது ஆயுதங்களை களப்புகளில் எறிந்ததை அவதானிக்க கூடியதாக இருந்ததாகவும் அச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பலர் தமது அஞ்சல் அடையாள அட்டைகளை படையினரிடம் சமர்பித்துள்ளதுடன் அவர்ளது தலைமயிர் மிகவும் கட்டையாக வெட்டப்பட்டுள்ளது. கட்டாயப் பயிற்சிக்கு இணைத்துக்கொண்டவர்களை இலகுவாக இனங்காண்பதற்காக புலிகள் அவ்வாறு வெட்டியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பலர் புலிகள் தம்மை நாடாத்திய விதம் பற்றி மிகவும் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்துள்ளனர் என்பது அவதானிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment