Thursday, May 14, 2009

கோத்தபாய தற்கொலைக் தாக்குல் சந்தேக நபர் கைது.

கடந்த 2006ம் ஆண்டு பிற்றல சந்தியில் பாதுகப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சமீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பிரதான சந்தேக நபர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமான பாடசாலையொன்றில் தங்கியிருந்த போதே இவர் இன்று காலை வவுனியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தரான இவர் பாதுகாப்புச் செயலரின் தாக்குலின் பின்னர் வன்னிக்குத் தப்பிச் சென்றிருந்தார். கடந்த காலங்களில் மக்கள் வன்னியில் இருந்து வந்தபோது மக்களோடு மக்களாக உட்புகுந்த இவர் மேலும் பல தாக்குதல் திட்டங்களுடன் வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com