Friday, May 8, 2009

இலங்கை ஆயுதப் படைகள் புலித்தலைமையை அணுகிக் கொண்டிருக்கிறன.

பாதுகாப்பு வலயத்திலுள்ள கரையாமுள்ளிவாய்கால் பகுதியிலமைந்திருந்த புலிகளின் கடைசி மண் தடை அணையும் ஆயுதப்படைகளால் உடைக்கப்பட்டுளது. கண்ணிவெடிகள் சரளமாக விதைக்கப்பட்ட இந்த நிலப் பரப்பில் ஆயுதப் படைகள் மிகவும் சிறிய வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. வேலுப்பிள்ளை பிரபாகரனை அடைவதற்கு இன்னும் 8000 மீட்டர் தூரமே உள்ளதாக ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன. பொதுசனங்களின் மத்தியிலேயே புலித்தலைமை உள்ளது.

புலித்தலைமை தமது பாதுகாப்புக்காகவும் படையினரின் முன்னேற்றத்தைத் தாமதப் படுத்துவதற்காகவும் ஏராளமான தற்கொலைப் படையினரை ஏவிவிட்டுள்ளனர். அதனோடு 500 தொடக்கம் 1000 கரும்புலிகளையும் போராட்டத்தில் இறக்கியுள்ளனர். அழியும் நிலையிலுள்ள புலித்தலைமை ஆயுதப்படைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காகப் பாதுகாப்புப் பிரதேசத்திலிருந்து தங்களின் கனரக ஆயுதங்களால் கண்மண் தெரியாமல் நாலாபக்கமும் சுடுகின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தள்ளது:

No comments:

Post a Comment