Thursday, May 14, 2009

சர்வதேசத்தின் வேண்டுகோளை இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போரை தற்காலிகமாக நிறுத்துமாறு சர்வதேசம் இலங்கை அரசிற்கு விடுத்துவரும் அழுத்தங்களுக்கு தாம் அடிபணியப் போதில்லை என இலங்கை ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நேற்று இலங்கை விவகாரம் தொடர்பாக முதன்முறையாக கூடிய ஐ.நா பாதுகாப்பு சபை விடுத்துள்ள அறிக்கையை தொடர்ந்தே இக்கருத்தினை அவர் தெரிவித்துள்ளார். ஐ.நா வின் அறிக்கையில் இலங்கை அரசு சர்வதேச சட்டதிட்டங்ளை மதிக்கவேண்டும் எனக் குறிப்பிட்பட்டதற்கு தாம் அவற்றின் பிரகாரமே செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment