Sunday, May 3, 2009

பாதுகாப்பு பகுதியில் புலிகள் விமானம் இல்லை: இலங்கை ராணுவம்

முல்லைத்தீவில் உள்ள பாதுகாப்பு பகுதியில் விடுதலைப் புலிகளின் விமானம் எதுவும் இல்லை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி 5 கி.மீ. சுற்றளவுக்கு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் உள்ளதால் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு புலிகளின் விமானம் ஒன்று ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இதை இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.

கொக்குவில் என்னுமிடத்தில் விமானத்தில் பயன்படுத்தக்கூடிய சுமார் 8 வெடிகுண்டுகளை கைப்பற்றியுள்ளோம். ஆனால், அப்பகுதியில் புலிகளின் விமானம் எதுவும் இருக்கக்கூடிய வாய்ப்பில்லை என்றார்.

No comments:

Post a Comment