Thursday, May 28, 2009

வெளிநாடுகளிலிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களை கைதுசெய்வதற்கு சர்வதேசம் உதவி

வெளிநாடுகளிலிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கைதுசெய்வதற்கு அந்தநாட்டுப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையை தடுப்பதற்கு சர்வதேச நாடுகளிலிருக்கும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் முயற்சிப்பதாகவும், எனினும், இத்தகையவர்களை கைதுசெய்வதற்கு சர்வதேச நாடுகளின் உதவி கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அநேகமான வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் இருப்பதாகவும் ரோஹித்த போகல்லாகம தெரிவித்தார்.

No comments:

Post a Comment