விடுதலை புலிகள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று உத்தியோகபூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
அவர் அங்கு உரையாற்றுகையில்
விடுதலை புலிகளால் சிங்களவர் தமிழர் முஸ்லிம் என அனைத்து மக்களும் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் இனத்தை சேர்ந்த தலைவர்கள் உட்பட பல்லாயிரகணக்கான மக்களை கொன்று குவித்த விடுதலை புலிகளை இராணுவத்தினர் வெற்றி பெற்றுள்ளனர்.
இது தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றி அல்ல பயங்கரவாதிகளுக்கு எதிரான வெற்றியாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி இலங்கையில் இரண்டு இனங்களே உள்ளது எனவும் அதில் ஒன்று நாட்டை ஆதரிக்கும் இனம் மற்றயது நாட்டை ஆதரிக்காமல் அதிலிருந்து விலகியிருக்கும் இனம் என குறிப்பிட்ட அவர் ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கையை உருவாக்கி அதில் எல்லா இன மக்களும் சம உரிமையோடு அமைதியாக வாழ வழியமைத்து கொடுக்கப்படும் என உறுதியழித்தார்.
No comments:
Post a Comment