Saturday, May 9, 2009

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்கரும்புலிகள் மீண்டும் ஒருமுறை.


முல்லைத்தீவு வெள்ளாமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தை அண்டிய கடற்பரப்பில் இன்று அதிகாலை 3 மணியளவில் புலிகளுக்கும் கடற்படையினருக்கும் மோதல் ஒன்று வெடித்துள்ளது. இத்தாக்குதலில் புலிகளது தற்கொலைப் படகொன்று முற்றாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் இருபடகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படைச் செய்திகள் தெரிவிக்கின்றது.

கைப்பற்றப்பட்டுள்ள படகுகளில் முற்றாக வெடிமருந்து நிரப்பப்பட்டுள்ளதாகவும் இத்தாக்குததலின் போது 14 புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் இருபுலிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment