Friday, May 22, 2009

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும்: மன்மோகன்சிங்குக்கு அனுப்பிய செய்தியில் ராஜபக்சே உறுதி

2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற மன்மோகன் சிங்குக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவு, உங்கள் அரசுக்கு மக்கள் அளித்த நல்லாதரவை காட்டுகிறது. நீங்கள் மீண்டும் பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதால், இலங்கை-இந்தியாவின் உறவு மேலும் பலப்படும் என்று நம்புகிறேன். நான் தங்களுடன், இணைந்து மகிழ்ச்சியுடன் தொடர்ந்து செயலாற்ற விரும்புகிறேன். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று உறுதி கூறுகிறேன். இதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும். தீவிரவாதத்தில் இருந்து இலங்கை இப்போதுதான் மீண்டு இருக்கிறது. உலக நாடுகளில் தீவிரவாதத்தை ஒழிக்க உங்களுடன் இணைந்து செயல் படுவேன். இவ்வாறு ராஜபக்சே கூறி இருக்கிறா

No comments:

Post a Comment