சுதந்திர கட்சியைச் சேர்ந்த கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தனவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனிப்பட்ட பிணக்கு காரணமாக பிரதேசவாசி ஒருவரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த பாராளுமன்ற உறுப்பினர் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ததுடன், வீட்டுத்தலைவரைத் தாக்கி விட்டு 12 வயது குழந்தையை கடத்திச் சென்று தடுத்து வைத்தமைக்காக நீதிமன்றம் இவ் உத்தரவை வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment