Tuesday, May 19, 2009

அம்பாறை மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.


வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்காக அம்பாறை மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களுடன் நேற்று வவுனியா சென்ற அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் திரு. இனியபாரதி அவர்கள் அப்பொருட்களை வவுனியா மாவட்ட பிரதேச செயலர் ஊடாக அம்மக்களுக்கு பகிர்ந்தளித்தார்.

வவுனியா இடைத்தங்கல் முகாமிற்கான தனது விஜயம் தொடர்பாக கருத்து தெரிவித்த திரு. இனியபாரதி அவர்கள், அங்குள்ள மக்களுக்கான தேவைகள் நிறையவே உள்ளன. அம்மக்களது பிரச்சினைகளை பார்த்தும் நேரடியாக கேட்டும் அறிந்து கொண்டேன். இது தொடர்பாக ஜனாதிபதி அவர்களின் நேரடிக்கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு அவரை ஒரிரு தினங்களில் சந்திக்க உள்ளேன். அவரிடம் இருந்து நல்ல பதில்கள் கிடைக்கும் என்ற பூரண நம்பிக்கை எனக்குண்டு. அச் செய்திகளுடன் மிக விரைவில் மீண்டும் அங்கு செல்ல ஆவலாக உள்ளேன் என்றார்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com