Monday, May 18, 2009

பிரபாகரனது மரணத்தை அசுரன் அல்லது அரக்கனது இறப்பாக எடுத்துக்கொள்ளுங்கள் - டக்கள் தேவானந்தா.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்பு தொடர்பாக நேத்ரா தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்த ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா, பிரபாகரனது பெயராலும் பிரபாரனாலும் இந்த நாடு, குறிப்பாக தமிழ் சமுதாயம் நிறைய கஸ்டங்களுக்கும் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. அந்த வகையில பிரபாகரனது இறப்பானது அந்த மக்களுக்கு திருப்தியளிக்கும் என நம்புகின்றேன். அதாவது அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமையும் என நம்புகின்றேன். சமயங்கள் கூறுவதுபோல் ஓர் அசுரன் அல்லது அரக்கனுடைய இறப்பாகவே பிரபாகரனது இறப்பையும் கருதிக்கொள்ளவேண்டும்.

அந்த வகையில் இந்த சம்பவத்தை ஓர் மனிதனது இறப்பாக எடுக்காமல் ஒர் அசுரனது அல்லது அரக்கனது இறப்பாக எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com